Helpful Options

Transpose                                                

வானமும் பூமியும்

Starting Note: C

C
வானமும் பூமியும் படைத்தவராம் 
                        G           C
கடவுள் ஒருவர் இருக்கின்றார்
C
தந்தை சுதன் தூய ஆவியுமாய் 
G                                    C
நம்மில் உறவுடன் வாழ்கின்றார்!

பரிசுத்த ஆவியின் வல்லமையால்
திருமகன் மரியிடம் மனுவானார்;
மனிதரைப் புனிதராய் ஆக்கிடவே
புனிதராம் கடவுள் மனிதரானார்!

பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்,
கல்லறை ஒன்றில் அடக்கப்பட்டார்;
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்,
மரணத்தின் மீது வெற்றி கொண்டார்!

பரலோகம் வாழும் தந்தையிடம்
அரியணை கொண்டு இருக்கின்றார்;
உலகம் முடியும் காலத்திலே
நடுவராய்த் திரும்பவும் வந்திடுவார்!

பரிசுத்த ஆவியை நம்புகிறோம்,
பாரினில் அவர் துணை வேண்டுகிறாம்;
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று
பரிகார வாழ்வில் இணைந்திடுவோம்!

திருச்சபை உரைப்பதை நம்புகிறோம்;
புனிதர்கள் உறவை நம்புகிறோம்;
சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை
விசுவாசப் பொருளாய் நம்புகிறோம்!

தூய நல் ஆவியாம் இறைவனையும்
தூயவராக்கும் ஒப்புரவையும்
புனிதராம் இயேசுவின் ஆட்சியையும்
புனித நல் வாழ்விற்காய் ஏற்கின்றோம்.
-
ஆமென்!




1 comment:

  1. Thank you bro.. Very helpful for me as a beginner.. Could you please helpout with chords for Full Mass.. God bless!

    ReplyDelete